தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, November 28, 2014

PEN DRIVEஐ RAM ஆக பாவித்து உங்கள் COMPUTER வேகத்தை அதிகரிக்க ஒரு சூப்பர் ஐடியா


நமது கணணிகளில் சில வேலை போதுமான அளவு RAM காணப்படாமல் இருக்கலாம். மேலதிகமாக RAM ஒன்றை பொறுத்துவதனால் அவற்றின் விலை மிக அதிகமானதாகவே இருக்கின்றன. அதேவேளை பென்டிரைவ்களின் விலை குறைவானதே.
முதலில் Windows Xp யில் எவ்வாறு பென்டிரைவ் ஒன்றை RAM ஆக
பயன்படுத்தி கணணியின் performanceயை அதிகரிக்கலாம்.
முதலில் பென்டிரைவ் ஒன்றை(குறைந்தது 1GB) USB port வழியாக பொறுத்துங்கள்.


1. பின் My Computer ல் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
2. அதிலுள்ள Advanced பகுதியில் Performance இல் உள்ள Settings பொத்தானை அழுத்துங்கள்.
3. அதன் பின் தோன்றும் வின்டோவில் Advanced பகுதியில் Change பொத்தானை Click செய்து பென்டிரைவ்வை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
4. பின் Custom Size என்பதை Click செய்து பயன்படுத்த வேண்டிய அளவை டைப் செய்யுங்கள். (Initial மற்றும் Max எனும் இரு பிரிவிலும் ஒரே அளவை வழங்குங்கள்).
5. பின்னர் Set செய்து உங்கள் கணணியை Restart செய்யுங்கள் அல்லது ReadyBoost அல்லது eboostr மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின் பென்டிரைவ்வை பொறுத்தி eboostr control pannel இல் பென்டிரைவ்வை add செய்து பயன்படுத்தலாம். (Restart செய்தல் கட்டாயமானதே)
6. Windows 7 யில் பென்டிரைவ் ஒன்றை RAM ஆக பயன்படுத்தலாம். உங்கள் கணணி 256GB RAM கொண்டிருந்தால் 8 ReadyBoost Devices களை ஒவ்வொன்றும் 32GB கொள்ளவை உடை பென்டிரைவ்களாக பயன்படுத்தலாம். எனவே Windows 7 இல் மொத்தமாக 256GB RAM வரைக்கும் பயன்படுத்தலாம்.
உங்கள் பென்டிரைவ்வில் Right Click செய்து Properties தெரிவு செய்யுங்கள்.
அதில் ReadyBoost பகுதியில் Use This Device ஐ தெரிவு செய்யுங்கள்.
Space to reserve for system speed என்ற இடத்தில் கூட்டி விடவும்.
இப்போது Apply செய்து விடுங்கள், உங்கள் பென்டிரைவ்வின் Performance உயர்ந்துவிடும்

ஜிமெயிலில் தேவையில்லாத மின்னஞ்சல்களை Automatic Delete செய்வதற்கு

கூகுள் வழங்கும் அற்புத சேவையான ஜிமெயிலில் வசதிகள் ஏராளம். முற்றிலும் இலவசமான இந்த மின்னஞ்சல் சேவையை அனைவரும் பயன்படுத்துகிறோம்.
நாம் இணையத்தில் ஏதாவது ஒரு தளத்திலோ அல்லது வேறு எங்கோ நம் மின்னஞ்சல் ஐடியை கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவோம்.
இப்படி இணையத்தில் நம்முடைய மின்னஞ்சல் ஐடியை பகிர்வதால் இதை பல Spam நிறுவனத்தினர் கண்டறிந்து தேவையில்லாத
மின்னஞ்சல்களையும், ஆபத்தான மின்னஞ்சல்களையும் நமக்கு அனுப்பி கொண்டு இருப்பார். அதுபோன்ற Spam மின்னஞ்சல்களை எவ்வாறு வரும் பொழுதே Automatic Delete செய்வது என காணலாம்.
Follow Steps:
1. உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings பகுதிக்கு செல்லுங்கள்.
2. Filters என்ற வசதியை கிளிக் செய்யுங்கள்.
3. Create a new filter என்பதை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும்.
4. அதில் Has the Words பகுதியில் is:spam என்று டைப் செய்யுங்கள். மற்ற கட்டங்களை காலியாக விட்டு விடுங்கள்.
5. அடுத்து கீழே உள்ள Next Step என்ற பட்டனை அழுத்துங்கள். உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ வரும் அதில் OK கொடுக்கவும்.
6. அடுத்து இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Delete it என்பதற்கு நேராக உள்ள கட்டத்தில் டிக் மார்க் இடவும்.
7. அடுத்து கீழே உள்ள Create Filter என்பதை கிளிக் செய்யுங்கள். அவ்வளவு தான் Filter உருவாகிவிட்டது. இனி உங்கள் ஜிமெயில் முகவரிக்கு வரும் Spam மின்னஞ்சல்கள் தானாக Delete ஆகிவிடும்.
Note: கூகுள் கொடுத்து இருக்கும் Unlimited Space சேவையில் இதை delete செய்ய வேண்டிய அவசியமில்லை மற்றும் ஸ்பாம் போல்டருக்கு வரும் சில நல்ல மின்னஞ்சல்களும் அழிந்து விடும்

பாலியல் தளங்களை தடை செய்ய உதவும் மென்பொருள்

நமது வீடுகளில் T.V.க்களுக்கு நிகராக கம்ப்யூட்டரும் இன்டெர்நெட்டும் இடம் பிடித்துள்ள நிலையில் மோசமான பாலியல் தளங்களை பிள்ளைகளும் மற்றும் மாணவர்களும் பார்க்கக் கூடிய அபாயம் உள்ளது.
இத்தகைய தளங்களை அடையாளம் காணுவதும் தானாகவே ஓபன் ஆகும் தளங்களை தடை செய்வதும் சிரமமான ஒன்றாகும். கே 9 வெப்
புரடக்ஷன் (k9 web protection) என்ற இணையதளம் பாலியல் தளங்களை அடையாளம் கண்டு தானாகவே தடுத்து விடும் மென்பொருளை உருவாக்கி உள்ளது.
மேற்கண்ட தளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இன்ஸ்டால் செயல்முறையும் தடுக்கப்படும் மென்பொருள் பட்டியலும் தரப்பட்டுள்ளது.

தமிழ் இணையதளத்தை மொபைல் போன்லா பார்க்க:


How to read Tamil websites in Mobile Phone // தமிழ் இணையதளத்தை மொபைல் போன்லா பார்க்க:
Wireless / GPRS / 3G தொழில் நுட்ப வசதி கொண்ட மொபைல்களில் பின் வரும் வழிமுறையை கையாண்டு opera mini ப்ரைவ்சரில் நமது இணையதளம் உட்பட தமிழ் யுனிகோட்
இணையதளங்களை தமிழில் பார்க்க முடியும்.
ஒபேரா மினி ப்ரவ்சரின் அட்ரஸ் பாரில் opera:config (www என்றெல்லாம் கொடுக்க வேண்டாம்) என டைப் செய்து ok பட்டனை அழுத்தவும் (பின்வரும் படத்தை பார்க்கவும்)

பிறகு Opera Power user Settings என்ற பக்கம் இடம் பெறும் அப்டியே கீழே செய்து வந்திங்னனா (பின் வரும் படத்தை பார்க்கவும்)

இதில் “use bitmap fonts for complex scripts” என்ற ஆப்ஷனுக்கு சென்று அருகில் இருக்கும் No என்பதைyes ஆக மாற்றி பிறகு ok பட்டனை அழுத்திங்கள்!
தேவைப்பட்டால் ஒபேரா மினி ப்ரவ்சரை ரிசார்ட் செய்து நமது இணையளத்தை திறந்து பாருங்கள்!
தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிவது என்பது பயன்படுத்தப்படும் செல்போனின் தொழில்நுட்பத்தை பொறுத்தே என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!
புதிய வேர்சன் ஒபேரா மினி தங்களுக்கு வேலை செய்யவில்லை எனில் பழைய வேர்சனை 6.2 (opera mini 6.2 ) முயற்சிக்கவும்.
(இவ்வாறு ஒபேரா மினி ப்ரவ்சரில் தமிழில் பார்க்கும் போது உங்களின் GPRS டேட்டா சாதாரணமாக பார்ப்பதை விட அதிகமாக செலவாகும் எனவே உங்கள் ஆப்ரேட்டரின் GPRS கட்டனத்த கவனத்தில் கொள்ளுங்கள்). வை-ஃபை இருந்தால் பிரச்சினை இல்லை.

மனிதர்களை சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தும் ஃபேஸ்புக்!


Facebook Users are Getting More Private and Less Social
நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் சவுகரியத்தினை ஏற்படுத்தி உள்ள ஃபேஸ்புக் மனதளவில் சிறியவர்களையும், பெரியவர்களையும் பாதிப்பதாக செய்திகள் வெளியாகின. ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்தில் இருந்து விலகி செல்வதாக இன்னொரு பகீர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் பயன்படுத்துவோரது மன நிலை, அவர்களிடம் ஏற்படும் மனநல மாற்றங்கள் குறித்து 1.40 கோடி பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் சமூகத்துடன் நெருங்கி பழகாமல், மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எந்த நேரமும் ஃபேஸ்புக் இவர்களை ஆக்கிரமித்து கொள்வதால் உடன் இருப்பவர்களை பற்றி கூட அதிகம் தெரிந்து கொள்ளவதற்கு தவறுவதாக சில தகவல்கள் கூறுகின்றனர். தூரத்தில் இருக்கும் நண்பர்களிடம் தகவல்களை அதிகம் பரிமாறி கொள்ள உருவான ஃபேஸ்புக், இப்போது அருகில் இருப்போரது நெருக்கத்தை குறைத்து கொண்டும் இருக்கிறது.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே…!

கம்ப்யூட்டரில் Plug-ins என்றால் என்ன ? அதன் பயன்கள் என்ன ?



தமிழில் கம்ப்யூட்டர் தகவல்கள் தளங்களுக்கு வரும் அதிகமான நண்பர்கள் கேட்க்கும் கேள்விகளில் இதுவும் ஒன்று.

பொதுவாக Plug-ins என்பதன் அர்த்தம் ஒன்றுடன் தன்னை இணைத்துக்கொள்வது. தன்னிச்சையாக செயல்படும் திறம் அற்றது.  அதாவது இந்த Plug-in களை மட்டும் வைத்து நீங்கள் தனியாக பயன் அடைய முடியாது. நாம் பயன்படுத்தும் ஒரு பொருளுக்கு கூடுதலாக சக்தியை கொடுப்பதற்கு இதனை நாம் பயன்படுத்த முடியும்.
இனி இந்த Plug-ins என்பது கம்ப்யூட்டரில் எப்படி நமக்கு பயன்படுகிறது என்று பார்ப்போம். கம்ப்யூட்டரில் ஒரு மென்பொருள் ( Software ) இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அந்த மென்பொருள் நம் கைக்கு கிடைந்த பிறகு அந்த மென்பொருள் தயாரித்த நிறுவனம் அதற்கு கூடுதலான ஒரு சக்தியை கொடுக்க நினைத்தால் அதை எப்படி கொடுப்பது. அதனை Plug-in என்ற பெயரில்தான் கொடுக்க முடியும்.  அந்த Plug-in ஐ அவர்கள் தங்கள் தளத்தில் இணைத்து வைத்திருப்பார்கள் அதனை நாம் டவுண்லோடு செய்து நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துகொண்டால் நாம் ஏற்கனவே இன்ஸ்டால் செய்து வைத்துள்ள அந்த நிறுவனத்தின் மென்பொருளோடு அது இணைந்துகொள்ளும். பிறகு நாம் அந்த மென்பொருளை ஓப்பன் செய்து பார்த்தால் நாம் Plug-in முறையில் சேர்ந்த அந்த கூடுதல் ஆப்சன் அங்கு வந்திருக்கும். 
இந்த Plug-ins கள் பல முக்கிய மென்பொருள்களுக்கு அவசியமான தேவையான ஒன்றாக இன்று மாறி இருக்கிறது.  உலகப்புகழ் பெற்ற சில மென்பொருள்களுக்கு அந்த மென்பொருளை உருவாக்கிய நிறுவனங்கள் தயாரிக்கும் Plug-ins கள் போக கூடுதலாக வேறு சில நிறுவனங்களும் இதற்கு பொருத்தமான Plug-in களை உருவாக்கி வியாபாரம் செய்கிறது. 
உதாரணத்திற்கு Adobe Photoshop என்ற உலகப்புகழ் பெற்ற போட்டோ டிசைனிங் செய்யும் மென்பொருளுக்கு அதற்கு பயன்படும் கூடுதல் சக்தியை கொடுக்கும் Photoshop Actions, Photoshop Gradients, Photoshop Styles மற்றும் Photoshop Filters போன்றவைகள் Plug-ins களாக உருவாக்கி வெளியிடுகிறது. இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் புதுப்புது வித்தியாசமான டிசைன்களை உருவாக்க முடியும். இதுபோன்ற போட்டோசாப் Plug-ins களை இன்று மற்ற மென்பொருள் நிறுவனங்களுக்கும் வித்தியாசமாக உருவாக்கி வெளியிடுகிறது.
இந்த Plug-ins கள் இரண்டு வகை உண்டு. ஒரு வகை Executive Files போன்று இருக்கும். இந்த Executive File ஐ நீங்கள் டபுள் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்தால் போதும். இன்ஸ்டால் ஆன உடன் அது தானாக அதற்கு உரிய மென்பொருளோடு சேர்ந்துகொள்ளும். வேறு சில Plug-in கள் உள்ளது. உதாரணத்திற்கு Photoshop Actions Plug-ins இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்ய முடியாது. இந்த Plug-in களை போல்டரோடு காப்பி செய்து அப்படியே C டிரைவில் உள்ள போட்டோசாப் போல்டரில் பேஸ்ட் செய்தால் போதும். அதனை நாம் பயன்படுத்த முடியும்.
அடுத்து மற்ற மென்பொருள்களின் Plug-ins களை பற்றி பார்ப்போம்.
Internet Browser ல் முதல் இடத்தை பிடித்து அனைவரின் விருப்பத்தையும் பெற்ற Mozilla Fire Fox என்ற இண்டெர்நெட் இயங்கு தளம் தமிழர்களால் நெருப்பு நரி உலவி என்று அழைக்கப்படும் இந்த FireFox மற்ற Internet Browser களை விட அதிக Plug-ins களை உள் அடக்கி உள்ளது. இதற்கு உரிய Plug-ins களை மூன்றாம் தர ( Third Party ) நிறுவனங்களும் போட்டி போட்டு தயாரித்து வெளியிடுகிறது.
உதாரணத்திற்கு இந்த Fire Fox ல் நீங்கள் அதன் மேலே Tools ல் உள்ள Add-on என்பதை கிளிக் செய்துவிட்டு இங்கு கீழே காண்பதுபோல் அதன் Search Box ல் PDF என டைப் செய்தால் PDF சம்பந்தமான PDF Editor, PDF Viewer, Save to PDF, Web to PDF போன்ற Plug-in கள் உங்களுக்கு கிடைக்கும் இதனை அதன் அருகில் உள்ள Install பட்டன்கள் மூலம் இன்ஸ்டால் செய்துகொண்டால் நீங்கள் இந்த Fire Fox மூலமாகவே PDF சம்பந்தமான அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியும். உதாரணத்திற்கு நீங்கள் திறந்து வைத்திருக்கும் Web Page ஐ PDF பைலாக மாற்ற வேண்டுமென்றால் அதற்கு இந்த Fire Fox Plug-in உங்களுக்கு உதவும். 

உலகிலேயே பணியாற்ற சிறந்த நிறுவனம் எது தெரியுமா ? கூகுள் தானாம்!!



பணியாற்ற சிறந்த நிறுவனமாக தொடர்ந்து 3வது ஆண்டாக உலகிலேயே இணைய தள தேடல் நிறுவனமான கூகுள் முதலிடம் பெற்றுள்ளதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

மனித வள பிரிவில் சிறந்த நிறுவனங்கள் பற்றி ஆய்வு செய்யும் சர்வதேச நிறுவனம் யுனிவர்சம். அதன் ஆய்வின்படி இந்த ஆண்டில் ஊழியர்கள் அதிக மனநிறைவுடன் பணியாற்றும் உலகின் முன்னணி 50 நிறுவனங்கள் பட்டியலை அது தயாரித்தது. 

அதில் தொடர்ந்து 3வது ஆண்டாக முதலிடம் பிடித்தது கூகுள். பணியாற்ற

ஏற்ற சூழல், திறமைக்கு மதிப்பு, உழைப்புக்கேற்ற அங்கீகாரம், ஊதியம் என எல்லா வகையிலும் திருப்தி அளிப்பதாக கூகுள் பற்றி இந்தியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, அமெரிக்கா நாடுகளை சேர்ந்த 1.6 லட்சம் ஊழியர்கள் தெரிவித்தனர்.

திறமை இருந்தால் உங்களுக்கு முதல் இடம் 

பிரபல தணிக்கை நிறுவனமான கேபிஎம்ஜி, பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. மேலாண்மை கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றவர்கள் பணியாற்ற விரும்பும் நிறுவனமாக அது உள்ளது. பொறியியல் பட்டதாரிகளின் தேர்வாக ஐபிஎம் உள்ளது. பொறியியல் பட்டதாரிகள் பணியாற்ற விரும்பும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் 3வது இடத்தில் உள்ளது. கார் நிறுவனமான பிஎம்டபிள்யூ (4), சிப் தயாரிப்பாளர் இன்டெல் (5), மின்னணு நிறுவனம் சோனி (6), தொழில் நுட்ப நிறுவனம் ஆப்பிள் (7), ஜிஇ (8), சீமன்ஸ் (9), பி அண்ட் ஜி (10) என முதல் 10 இடங்களில் உள்ளன.

சில கூகுள் ஆபீஸ் படங்களை தருகிறேன் :

மடியில வச்சு லேப் டாப் உபயோகிக்கிறீங்களா? கொஞ்சம் கவனிங்க --உபயோகமான தகவல்கள்


லேப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மைக்குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

மடிக் கணினியால் பாதிப்பு

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லேப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமித வளர்ச்சியடைந்துள்ளது.எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லேப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்கு ஏற்ப இதனை ஏராளமானோர் மடியில் வைத்தே உபயோகிக்கின்றனர். இவ்வாறு லேப்டாப்களை மடியில் வைத்து உபயோகிப்பது ஆண்களுக்கு எண்ணற்ற விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே மடிக்கணினிகளை உபயோகிக்கும் போது வை-பை இணையதளத்தையும் வைத்து உபயோகிக்கின்றனர்.இதனால் எழும் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்காந்த கதிர்வீச்சு

இது குறித்து 29 ஆண்கள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டனர். ப்போது வை-பை இல்லாமல் மடிக்கணினியை உபயோகித்து பரிசோதனை செய்தபோது அவர்களின் விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரியவந்தது. அதேசமயம் லேப் டாப்பில் வை-பையை இணைத்து உபயோகித்தபோதே அவர்களின் விந்தணு மோசமாக பாதிக்கப்பட்டது ஆய்வில் தெரியவந்தது. இதற்குக் காரணம் வை-பையில் இருந்து எழும் மின்காந்த கதிர்வீச்சுதான் என்று தெரியவந்தது. இந்த கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியம் குறைவதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அக்கறை அவசியம்

எனவே வை-பை இணைப்போடு லேப் டாப் உபயோகிக்கும் ஆண்களுக்கு ஆண்மை குறைபாடு ஏற்படுவதால் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அந்த ஆராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் செல்போன் மற்றும் டேப்லெட் வழியாகவும் வை-பை உபயோகிக்கும் போதும் ஆண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லேப்டாப்களில் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஏற்கனவே ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews