தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 22, 2014

ப்ளேம் (Flame) வைரஸ் எச்சரிக்கை




புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது.

ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது.

(http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.


ப்ளேம் வைரஸ், கம்ப்யூட்டரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.

பாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது.

கம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது.

எனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.

இந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது.

அப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

Sim Card இல் அழிந்து போன தகவலகளை மீட்பது எப்படி?


simcards-gsm-association
சிம் cardல் அழிந்து போன தரவுகளை மீண்டும் பெற வேண்டுமா? நாம் சேமித்து வைத்திருந்த ( Phone Book Numbers, Call History, Sms போன்றவற்றை பெற்றுக்கொள்ள இதோ சிறிய மென்பொருள் ஒன்று. Sim Card Recovery 3.0 என்ற மென்பொருளின் மூலம் நமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்க Trile Verision ஆகதான் தரவிறக்க முடியும். இதன் மூலம் எமது தரவுகளை மீட்டிக்கொள்ள முடியும். இதை பணம் கொடுத்து வாங்கினால் நாம் sim வாங்கியதிலிருந்து அழிந்த தரவுகளை மீளப்பெற முடியும்.
மென்பொருளை தரவிறக்க கீழுள்ள link மூலம் செல்லுங்கள்.
http://www.mediafire.com/download/skyx0y79qamp65k/simcard+recovery.rar

YOUTUBEஇல் வீடியோக்களை பார்க்க இனி இணைய இணைப்பு தேவையில்லை


கூகுள் நிறுவனம் தனது யு டியூப் பயன்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் இணைய இணைப்பு இல்லாமல் வீடியோவை பார்க்கும் புதிய வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
வீடியோக்களை ஒன்லைன்னில் பார்க்கும் அவை 48 மணி நேரத்திற்கு சேமித்து வைக்கப்படும். அதன்படி எதிர்வரும் 48 மணிநேரங்களுக்கு இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்வையிட முடியும். ஆனால் Mobile App மூலம் பார்ப்பவர்களுக்கு மாத்திரமே இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்த வசதி காணப்படுகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து யு டியூப் அதிகாரி கூறுகையில் ”இந்தியாவில் மொபைல் மூலமாக யு டியூப் பார்ப்பது தற்போது 40 சதவீதமாக உள்ளது. இந்த புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் இதன் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் டேட்டா செலவு மிச்சமாவதோடு எந்த தடையும் இல்லாமல் திரும்ப திரும்ப வீடியோ பார்க்கலாம்” என்றார்.
மேலும், இணைய கட்டணங்கள் அதிகமாக இருப்பதால் மொபைலுக்கேற்ப வீடியோ அளவை குறைத்து செலவை குறைக்கவும் யு டியூப் திட்டமிட்டுள்ளது. உலகளவில் யு டியூபுக்கு இந்தியா 5ஆவது பெரிய சந்தையாக விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

2038 இல் கணினிகள் செயலிழக்க வாய்ப்பு

y2k
உலகம் முழுவதும் கணினி மயமாகியிருக்கும் இந்த நூற்றாண்டில் கணினிகள் செயலிழக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2038 ஆம் ஆண்டில் பெரும்பலான கணினிகள் செயலிழக்கக்கூடிய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கணினிகளில் நேரத்தை கணக்கிடும் முறையிலுள்ள தொழில்நுட்பமே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
1938 மார்ச் 19 ஆம் திகதி கிறீனிச் நேரப்படி அதிகாலை 3 மணி 14 நிமிடம் 7 வினாடி எனும் நேரத்தை அடையும்போது கணினிகளால் நேரத்தை புரிந்துகொள்ள முடியாமல் போய்விடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதனை Year 2038 Problem என நிபுணர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான கணினிகளின் ஒப்பரேட்டிங் சிஸ்டம் 32 பிட் சிஸ்டம் முறைமையிலேயே இயங்குகின்றன. 32 பிட் இன்டிஜர்( 32-bit integer )முறையில் அதிபட்சமாக 2,147,483,647 வினாடிகளையே கணக்கிட முடியும். இத்தகைய 32 பைட் சிஸ்டம் கணினிச் செயன்முறைகளில் ஆரம்ப நேரமானது 1970 ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலை 00.00 மணியாக குறிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2038 மார்ச் 19 ஆம் தேதி அதிகாலை 3.14 மணியாகும்போது 1970 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து  2,147,483,647  வினாடிகள் கடந்துவிடும்.
அதன்பின் நேரத்தை சரியாக கணக்கிட முடியாமல் 32 பிட் சிஸ்டம் கணினிகள் செயலிழக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் 64 பிட் சிஸ்டம் முறைமைக்கு கணினிகளின் மென்பொருட்கள் மாற்றப்பட வேண்டியிருக்கும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே யூ ரியூப் இணையத்தளம் இத்தகைய நெருக்கடியை எதிர்கொண்டு 64 பிட் சிஸ்டத்துக்கு மாறியிருந்தது.

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews